Annadurai - Periyar

அறிஞர் அண்ணா – 6 சுவாரஸ்யத் தகவல்கள்!

தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதி தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் கோட்டையாகக் கட்டியெழுப்பிய அறிஞர் அண்ணா, தமிழகத்தின் முதல்வராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். காஞ்சிபுரத்தில் எளிமையான நெசவுக் குடும்பத்தில் நடராசன் – பங்காரு தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உயிரிழந்தார். பெரியாருடன் இணைந்து அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிய அண்ணா, இறுதிவரை திராவிடக் கொள்கைகள் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்தார். அரசியல் தவிர்த்து இலக்கியம், சினிமா, எழுத்து என பல்துறை வித்தகராக விளங்கிய அண்ணாவின், `மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் பிரபலமானது.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top