தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13,000-த்தைக் கடந்திருக்கிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, டாக்ஸி சேவை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஏப்ரல் 26-ம் தேதி முதல் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

எவற்றுக்கெல்லாம் தடை?
- சினிமா தியேட்டர்கள்
- மால்கள்
- பார்கள்
- உடற்பயிற்சிக் கூடங்கள்
- பெரிய கடைகள்
- சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை.
- உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
- இ – கமர்ஸ் சேவை வரையறுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் அனுமதி
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை.
- இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை (IT, ITES Companies) நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

- கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை. அதேநேரம், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிக்கு மட்டும் அனுமதி.
- புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருபவர்கள் http://eregister.tnega.org என்ற தளத்தில் பதிவு செய்த விவரத்தைக் காட்டிய பிறகே தமிழகத்துக்குள் நுழைய அனுமதி.
- வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகள் அனைவரும் http://eregister.tnega.org என்ற தளத்தில் பதிவு செய்தபின்னரே அனுமதி.
- பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி என்ற ஏற்கனவே அமலில் இருக்கும் உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
- வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.
- தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
There are some interesting deadlines on this article however I don’t know if I see all of them heart to heart. There’s some validity however I will take hold opinion until I look into it further. Good article , thanks and we would like extra! Added to FeedBurner as nicely
me encantei com este site. Para saber mais detalhes acesse nosso site e descubra mais. Todas as informações contidas são informações relevantes e diferentes. Tudo que você precisa saber está está lá.
I like this web site so much, saved to favorites.
I’d always want to be update on new content on this web site, saved to favorites! .
Hi would you mind letting me know which hosting company you’re working with? I’ve loaded your blog in 3 completely different internet browsers and I must say this blog loads a lot quicker then most. Can you suggest a good web hosting provider at a honest price? Thanks a lot, I appreciate it!
I really appreciate this post. I have been looking everywhere for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thx again
Very interesting details you have noted, regards for posting. “Pleasure and love are the pinions of great deeds.” by Charles Fox.