‘நண்பன்’ கருணாநிதி, தி.மு.க. வேட்பாளர்… ‘இசை முரசு’ நாகூர் அனீபா வாழ்வின் 5 நெகிழ்ச்சிகள்!

நாகூர் அனீபா அவர்களின் சிறுவயதிலேயே அவருடைய பெற்றோர் நாகூருக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். நாகூர் செட்டியார் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இஸ்லாமிய மாணவர்கள் முன்னிலையில் இறைவணக்கப் பாடல் பாடியதே அவரது முதல்மேடை. 11 வயது முதலே மேடையில் பாடத் தொடங்கிவிட்டார் அனீபா.

`அண்ணா அழைக்கிறார்’, `ஓடி வருகிறான் உதயசூரியன்’, `வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததாடா…’, `இறைவனிடம் கையேந்துங்கள்’ போன்ற பாடல்கள் வாயிலாக நாகூர் அனீபாவின் குரல் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உரக்கப் பாடியதால், செவித்திறன் பாதிப்பு ஏற்பட்ட பின்னரும், இடைவிடாமல் மேடைகளில் பாடியவர் இசை முரசு நாகூர் அனீபா. ஒன்று, இரண்டல்ல, 15,0000-த்துக்கும் அதிகமான மேடைகளில் பாடியிருக்கிறார். இருந்துன், `நான் கச்சேரிக்காரன் அல்ல; கட்சிக்காரன்’ என்றே இறுதிக் காலம் வரை பெருமையோடு கூறிவந்தார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என திராவிட இயக்கத்தின் அனைத்து பரிமாணங்களையும் பார்த்த நேரடி சாட்சி இவர். பெரியார், அண்ணா, காயிதே மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் மீது ஈடுபாடு கொண்ட அவர், அண்ணாவின் அழைப்பை ஏற்று நாடகங்களிலும் நடித்தார். பணம் என்ற நாடகத்தில் கவிஞர் வேடமேற்ற அனீபா, கல்சுமந்த கசடர் நாடகத்தில் போர்வீரனாக நடித்தார்.

நாகூர் அனீபா வாழ்வின் ஐந்து நெகிழ்ச்சிகள்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top