’24’ படத்தில் சூர்யாவுக்கு பிடித்தது என்னனு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் வந்த டைம் மிஷின் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். குறைவான படங்களே வந்திருந்தாலும் அதில் ‘24’ மிக முக்கியமான படம். கதையாகவும் டெக்னிக்கலாகவும் பயங்கர ஸ்ட்ராங்காக இருந்த ‘24’ திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

‘24’ படத்தின் கதையை இயக்குநர் விக்ரம் குமார் சூர்யாவிடம் சொல்வதற்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர் உறுதியாகிவிட்டது. கதையைக்கேட்ட சூர்யா, `படத்தோட பட்ஜெட்டை அதிகப்படுத்தி எடுத்தால்தான் தரமான படமாக இது வரும். ஆனால்,  இது ஒரு எக்ஸ்ப்ரிமெண்டல் படமாக இருப்பதால் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்க விரும்பவில்லை. அதனால், நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்’ என கூறியிருக்கிறார். சூர்யா, அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பின்னர், அவரே ஹீரோவாக நடித்து தயாரித்த முதல் படம் இதுவே.

‘பேரழகன்’, ‘வேல்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மாற்றான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், ‘24’ படம்தான் அவர் மூன்று வேடங்களில் நடித்த முதல் படம். அதே போல், வில்லனாகவும் நடித்த முதல் படம் இதுவே. இந்தப் படத்தில் வரும் ஆத்ரேயா கதாபாத்திரம் சூர்யாவின் ஃபேவரைட் கதாபாத்திரமாம்.

‘சிங்கம் – 2’ ஹிட்டுக்குப் பிறகு ‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ என தொடர்ந்து இரண்டு படங்கள் சூர்யாவுக்கு எதிர்பார்த்தபடி போகாததால், ‘24’ படத்தை மிகப்பெரிய அளவில் நம்பியிருந்தார். அதே போல், படமும் வெற்றியடைந்து நிறைய விருதுகளை வெற்றது. அதிலும் குறிப்பாக, படத்தின் கலை இயக்கத்த்துக்கும் ஒளிப்பதிவுக்கும் தேசிய விருது கிடைத்தது.

‘24’ படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதில் சூர்யா பயங்கர ஆர்வமாக இருக்கிறாராம். அதற்கான கதையும் தயாராகி வருகிறது என இயக்குநர் விக்ரம் குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top