பிக்பாஸ் கேமராவுக்கு டஃப் கொடுக்கும் சென்னையின் சிசிடிவி.

சென்னை சிட்டியில் லண்டன் விடவும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களைவிடவும் 10 மடங்கு அதிகமான கேமராக்கள் சென்னையின் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கின்றன.

சமீபத்தில் ஆவடியில் ஒரு பெண்ணின் நகை திருட்டு போனது.

திருடியது முன்னாள் காவலர் என்பதை போலீஸ் சிசிடிவி உதவியுடன் கண்டறிந்தது.

புதுப்பேட்டையில் நடந்த ஒரு கொலையில், கொலை செய்த மூவரை அடையாளம் காட்டியது சிசிடிவி கேமராதான்.

இதுபோன்ற பல சம்பவங்களில் காவல்துறைக்கு உதவியாக இருப்பது. மேல இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் சிசிடிவி கேமராதான்.

பெருநகரங்களில் சிசிடிவி கண்காணிப்பு எப்படி உள்ளது என்று உலகம் முழுவதும் 130 நகரங்களில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் சென்னையை பற்றிய சில பாசிட்டிவ் விஷயங்கள் இடம்பெற்றிருந்தது.

சென்னையின் ஒவ்வொரு சதுரகிலோமீட்டருக்கும் 657 கேமராக்களை வைத்து கண்காணிக்கிறது காவல்துறை.

இது லண்டனைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். சீனத் தலைநகர் பெய்ஜிங்கைவிட மூன்று மடங்கு அதிகம். (Graph)

ஆனாலும் ஒட்டுமொத்த கேமராக்கள் எண்ணிக்கையில் சென்னை குறைவாகவே உள்ளது.

சென்னை முழுவதும் 2.8 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 4.2 லட்சம் கேமராக்கள். (Graph)

சராசரியாக ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 25 கேமராக்கள்.

காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை லைவாக பார்க்க முடியும்.

அடுத்த முறை சிக்னலில் நிற்காமல் போனால் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இனி சென்னை சிட்டிக்குள் குற்றம் செய்தால் குறும்படம் நிச்சயம். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

கேமரா இருக்கு சரி. அது ஒழுங்கா வேலை செய்யுமா? என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. அது பிக்பாஸூக்குதான் வெளிச்சம்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களைவிடவும் 10 மடங்கு அதிகமான கேமராக்கள் சென்னையின் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கின்றன.

சமீபத்தில் ஆவடியில் ஒரு பெண்ணின் நகை திருட்டு போனது.

திருடியது முன்னாள் காவலர் என்பதை போலீஸ் சிசிடிவி உதவியுடன் கண்டறிந்தது.

புதுப்பேட்டையில் நடந்த ஒரு கொலையில், கொலை செய்த மூவரை அடையாளம் காட்டியது சிசிடிவி கேமராதான்.

இதுபோன்ற பல சம்பவங்களில் காவல்துறைக்கு உதவியாக இருப்பது. மேல இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் சிசிடிவி கேமராதான்.

பெருநகரங்களில் சிசிடிவி கண்காணிப்பு எப்படி உள்ளது என்று உலகம் முழுவதும் 130 நகரங்களில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் சென்னையை பற்றிய சில பாசிட்டிவ் விஷயங்கள் இடம்பெற்றிருந்தது.

சென்னையின் ஒவ்வொரு சதுரகிலோமீட்டருக்கும் 657 கேமராக்களை வைத்து கண்காணிக்கிறது காவல்துறை.

இது லண்டனைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். சீனத் தலைநகர் பெய்ஜிங்கைவிட மூன்று மடங்கு அதிகம். (Graph)

ஆனாலும் ஒட்டுமொத்த கேமராக்கள் எண்ணிக்கையில் சென்னை குறைவாகவே உள்ளது.

சென்னை முழுவதும் 2.8 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 4.2 லட்சம் கேமராக்கள். (Graph)

சராசரியாக ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 25 கேமராக்கள்.

காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை லைவாக பார்க்க முடியும்.

அடுத்த முறை சிக்னலில் நிற்காமல் போனால் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இனி சென்னை சிட்டிக்குள் குற்றம் செய்தால் குறும்படம் நிச்சயம். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

கேமரா இருக்கு சரி. அது ஒழுங்கா வேலை செய்யுமா? என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. அது பிக்பாஸூக்குதான் வெளிச்சம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top