Former Minister Manikandan

`கணவன் – மனைவிபோல் வாழ்ந்தோம்; ஏமாற்றிவிட்டார்!’ பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் ஐ.டி துறை அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி தேவா பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.

அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன். அ.தி.மு.க ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஓரங்கட்டப்பட்டு, அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை நடிகை சாந்தினி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

Former Minister Manikandan

மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்போது, அமைச்சராக இருந்தபோது மணிகண்டன் தன்னை சந்தித்ததாகவும், பின்னர் காதலிப்பதாகவும் கூறியதாக நடிகை சாந்தினி தெரிவித்தார். திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் பலமுறை கருவுற்றதாகவும் சொல்லும் சாந்தினி, அதை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். திருமணம் குறித்து கேட்டால், தன்னுடைய தவறான படங்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மணிகண்டன் மீது புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாருடன் வாட்ஸப் சாட்கள், புகைப்பட ஆதாரங்களையும் கமிஷ்னர் அலுவலகத்தில் சாந்தினி கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்த பின்னர் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Also Read – `ஆன்லைன் கிளாஸுக்கு டவலோடு வந்தார்!’ பாலியல் தொல்லை புகாரில் சென்னை பள்ளி ஆசிரியர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top